சனி

தேவநாதன் -கருவறையில் பெண்களின் ரகசிய வாக்கு மூலம்

காஞ்சி மன்மத குருக்கள் தேவ நாதன் வழக்கில் ஒரு அதிரடி  திருப்பமாகபாதிக்கப்பட்ட நான்கு பெண்கள் நீதிபதி முன்பாக ஆஜராகி பரபரப்பான வாக்குமூலம் ஒன்றை கொடுத்திருக்கிறார்கள்.

தேவநாதனால் மொத்தம் பதினெட்டுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டார்கள்என்றா லும் நான்கு பெண்களை மட்டு மே அவன் அர்ச்சகராக இருந்த மச்சேசுவரபெருமான் கோயிலின் கருவறைக்குள்ளேயே வைத்து களி யாட்டங்கள்நடத்தியிருக்கிறான்.

அதில் முதலாவது பெண் பூக்காரி கலா, அடுத்து லெக்சரரின் மனைவி தாரா,மூன்றாவது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் அபிதா, நான்காவது வீட்டு வேலைசெய்யும் பெண்ணான வள்ளி.

பூக்காரியான கலாவின் வாக்குமூலத்தில் தேவநாதன் எப்படியெல்லாம் பெண்களைவசியம் செய்வான் என வர்ணித்திருக்கிறார். ""சாராயம், சிகரெட் மற்றும்ஹன்ஸ் என்கிற புகையிலை போடும் பழக்கம் உடையவன் தேவநாதன். எப்பொழுதும்இடுப் பில் கட்டுகட்டாக பணமும் வைத்திருப் பான்.

ஆண்டவனுக்கு பூஜை செய்யும்போது சிவலிங்கத்தின் மறுபுறத் தை ஒரு பார் ஆக மாற்றி பீரையும், பிராந்தியையும் சாப்பிடுவான்.

"பீருடன் ஹன்ஸ் என்கிற புகையிலையை மெல்லும்போது தான் எனக்கு காமவெறிஉச்சத் திற்கு வரும். அந்த அரைமணி நேரத்திற்குள் எனக்கு ஒரு பெண் கிடைக்கவேண்டும்' என அடிக்கடி கூறுவான்.

அதே ஹன்ஸ் என்கிற புகை யிலையை விதவிதமாக பயன்படுத்திதான் பெண்களையும்வசியம் செய்வான். கோயிலுக்கு வரும் பெண்களிடம் அந்த புகையிலையை கரைத்துதீர்த்தம் தருவான்.

எனக்கு அப்படி கொடுத்தபோது நான் மயங்கி விழுந்தேன். என்னை கருவறைக்குள் தரதரவென மயங்கிய நிலையிலேயே அழைத்துச் சென்று கற்பழித்தான்.

நான் விழித்து பார்த்தபொழுது ஆடைகள் கலைந்த நிலையில் இருந்தேன். அப்பொழுதுஎன்னி டம் "மன்னித்துக் கொள். ஆண்டவன் சன்னிதியில் உறவு வைத்தால்புண்ணியம்' என காலில் விழுந்து கதறி னான்.

ஆனால் அடுத்த நாளே அவன் என்னுடன் கருவறையில் உறவு கொண்டதை படமாக செல்போனில் ஓடவிட்டு காட்டி என்னை மிரட்ட ஆரம்பித்தான்.

ஒரு கட்டத்திற்கு மேல் என்னை பாதுகாவலுக்கு நிற்க வைத்துவிட்டு மற்ற பெண்களுடன் கருவறையில் உறவு கொள்வான்.

மற்ற பெண்களை எப்படி மடக்கினாய் என அவனிடம் கேட்கும்போது "குளிர்பானத்தில் ஹன்ஸ் புகையிலை கரைசலை கலந்து மயக்கினேன். சர்க்கரை பொங்கலில் கலந்துமயக்கினேன். ஹன்ஸ் புகையிலையை ஒரு மாத்திரை வடிவத்தில் உருட்டி இதைபோட்டுக் கொண்டால் ஜலதோஷம் தலைவலியெல்லாம் வராது என கொடுத்து மயக்கினேன்'என்றெல்லாம் கூறுவான்.

கருவறையில் ஏன் செக்ஸ் வைத்துக் கொள்கிறாய் அது பாவமல்லவா என கேட்டதற்கு,"கருவறையில் செக்ஸ் என்றால்தான் தனக்கு ஒரு கிக்' என தெரி வித்தான்.ஒருநாள் அவனில்லாத சமயத்தில் அவனது நண்பர்கள் பலர் வந்து அந்த கருவறையில்மின்சார வேலைகள் செய்வதை பார்த்தேன்.

கருவறையில் அவன் செக்சில் ஈடுபடுவதை படம்பிடிக்க ரகசிய கேமராக்களை பிக்ஸ்செய்து, அவனது நண்பர்கள் மூலம் படம் பிடிக்கிறான் என நான்கண்டுபிடித்தேன்.

அவனிடம் என்னை கூட அப்படித்தான் படம் பிடித்தாயா? இந்த படங்களை விற்றுபணம் சம்பாதிக்கப் போகிறாயா? என கேட்டபோது, "உன் படம் மட்டும் வெளியேபோகாது' என வாக்குறுதி கொடுத்தான்.

கடைசியில் கருவறையில் செக்ஸ் என இன்டர் நெட்டில் வெளியான படங்களில் மூன்றுநான்கு இடத்தில் நான் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந் தேன்'' எனபூக்காரி வாக்குமூலம் தந்திருக்கிறார்.

"லெக்சரர் மனைவியான தாரா, அபிதா, வள்ளி ஆகியோரும் இந்த ஹன்ஸ் புகையிலைகதையையும் கருவறை செக்ஸையும் வாக்குமூலமாக சொன்னார்கள் என்றாலும் கலாவின்வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் போலீஸ் அடுத்த ஸ்டெப்பிற்கு போகும்'என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

தேவநாதன் தனியாக இந்த பாவச் செயலில் ஈடுபடவில்லை. சாதாரண செல்போன்கேமராவில் லீலைகளை படம் பிடிக்கவில்லை. அவனுடன் சேர்ந்து எலக்ட்ரானிக்தொழில் தெரிந்த செந்தில், பாலாஜி மற்றும் சச்சின் கம்ப்யூட்டர்ஸ் என்கிறநிறுவன உரிமையாளர் ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர்.

கருவறையில் செக்ஸ் என்பதையே மூலதனமாக்கி ஒரு பெரிய வியாபாரத்தை செய்துள்ளனர் என்கிற முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர்.

செந்தில், பாலாஜி ஆகியோர் முன்ஜாமீன் பெற்றிருப்பதும் தடயவியல் சோதனைக்காகஅனுப்பப்பட்ட அவர்களது லேப்டாப் விசாரணை இன்னமும் முடி யாததுதான்போலீசாருக்கு உள்ள இடர்ப்பாடுகள் என்கிறார்கள்.

-பிரகாஷ் நக்கீரன்-28.01.2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக