ஞாயிறு

காவல்துறையிடம் சிக்கிய மந்திரவாதி கக்கிய உண்மை


ஜோதிடம், மந்திரம் சொல்வதாகக் கூறி பெண்களை மயக்கி காம இச்சைக்கு ஆட் படுத்திக் கொண்ட மந் திரவாதிபற்றி திடுக்கிடும் பல தகவல்கள் வெளி யாகியுள்ளன.

கோவையில் கைதான மந்திரவாதியின் வலை யில் நடிகை உள்பட பெண்கள் மயங்கியது எப்படி? என்பது குறித்து பல தகவல் வெளியாகி உள்ளது. கோவை செல்வபுரம் எல்.அய்.சி. பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சி.ஜி.வி. நகரை சேர்ந்தவர் வி.டி.ஈஸ்வரன் (வயது 49). இவர் அந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ஜோதிட, சித்த மருத் துவ, மாந்திரீக வல்லுநர் என்று கூறி ஜோதிடம் பார்த்து வந் தார். நேற்று முன்தினம் செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சந்தி ரிகா என்ற பெண் ஈஸ் வரனை சந்தித்தார். தனது மகனுக்கு வேலை கிடைப்பதற்காகவும், கடன் பிரச்சினை தீருவ தற்காகவும் வந்ததாக அவர் கூறினார். பூஜை செய்வதாகக் கூறி

அதையடுத்து அந்த பெண்ணை பூஜைய றைக்கு அழைத்துச் சென்று பூஜை செய்வ தாகக் கூறி அவரிடம் ஈஸ்வரன் தவறாக நடக்க முயன்றதாக புகார் கூறப் பட்டது. சந்திரிகா கொடுத்த புகாரின் பேரில் ஈஸ்வரனை கோவை செல்வபுரம் காவல் துறையினர் அவரைக் கைது செய் தனர். அவர் மீது பெண் வன் கொடுமை சட்டப் பிரிவு 4 மற்றும் இந்திய தண் டனை சட்டம் 420 (ஏமாற்றுதல்), 508 (தன்னை பிரபலமான மனிதராக காண்பித்து ஏமாற்றுதல்) ஆகிய சட் டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.


சீல் வைப்பு

விசாரணையில் அவர் மந்திரவாதி என்று தெரியவந்தது. அவரது மாந்திரீக நிலையத்தில் இருந்து வசிய லேகியம், மாந்திரீக கற்கள், மை போன்ற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட் டன. அவற்றை பரிசோ தனை செய்தபோது அந்தப் பொருள்களும் போலியானவை என தெரியவந்தது. கைதான ஈஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட் டார். அவருடைய மாந் திரீக நிலையத்துக்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும் அவரது வீடு, மாந்திரீக நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட குறுந்தகடுகள் ஒளிப்படங்கள் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வி.டி. ஈஸ்வரன் வாக்குமூலம்

கைதான வி.டி.ஈஸ்வ ரன் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு: எனது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட் டம் புளியங்குடி. நான் 10ஆம் வகுப்பு வரை படித்து உள்ளேன். மேற் கொண்டு படிக்க எனக்கு இஷ்டமில்லை. அதனால் நான் ஜோதி டம் பார்த்து வருமானம் சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டேன். அதை யடுத்து ஜோதிடம் தொடர் பான புத்தகங்களைப் படித்தேன். ஜோதிடம் பார்க்கும் சிலரிடம் ஜோதிடம் பார்க்க செல் வதுபோல் அவர்களு டைய பேச்சு, பாவனை களையும் கற்றுக்கொண் டேன். பின்னர் கோவை வந்து முதலில் ஒரு லாட்ஜில் வாடகைக்கு அறை எடுத்து ஜோதி டம் பார்ப்பதாகக் கூறி னேன். என்னுடைய பேச்சுத்திறமையால் நான் என்னிடம் வருவோ ரின் பிரச்சினைகளை தெரிந்து கொள்வேன்.

செக்ஸ் குறும்பு

நான் கோவை மக் களிடம் பிரபலமானேன். அப் போதுதான் செல்வ புரத்தில் ஹம்சவேணி ஜோதிட சித்தமருத்துவ மாந்திரீக நிலையத்தை தொடங்கினேன். எனது மாந்திரீக நிலையத்துக்கு நிறைய பேர் வரத் தொடங் கினார்கள். அவர்களில் பலர் ஆண், பெண் வசியம் என்றுதான் வரு வார்கள். குறிப்பாக இளம்பெண்கள் காதலர் களை வசப்படுத்துவதற் காக வருவதுண்டு. அவர் களிடம் நான் பூஜை நடத்துவதுபோல் செக்ஸ் குறும்பில் ஈடுபட்டுஇருக்கிறேன். எனக்கு 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாடிக்கை யாளர்கள் இருக்கிறார் கள். பெரும்பாலான பெண்கள் குழந்தையின் மைக்கு தீர்வு கேட்டும், பரிகாரம் செய்வதற்காக வும் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் செக்ஸ் ஆசையைத் தூண்டும் வகையில் பேச் சுக் கொடுப்பேன். அதற்கு இடம் கொடுக்கும் பெண் களை மயக்கி அவர்களு டன் உல்லாசமாக இருந்து இருக்கிறேன். அந்தப் பெண்கள் எனக்கு கட்டணமாக ரூ.5 ஆயி ரம் வரை பணம் கொடுத் துக் செல்வதுண்டு. என்னிடம் வந்த பெண் களில் ஒரு நடிகையும் உண்டு. நான் என்னிடம் வரும் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கை யோடு நடந்து கொள் வேன். யாராவது எனது பேச்சுக்கு இடம் கொடுக்கா விட்டால் அவர்களிடம் எனது வேலையைக் காட்ட மாட்டேன். பல பெண் களிடம் பரிகார பூஜை செய்வதுபோல் செக்ஸ் குறும்பில் ஈடுபட்டு இருக்கிறேன்.

நான் செய்ததை பற்றி யாரிடமாவது சொன் னால் அவர்கள் ரத்தம் கக்கி இறந்துவிடுவார் கள் என்று கூறி மிரட்டி அனுப்பிவிடுவேன். அதனால் யாரும் என் னைப்பற்றி யாரிடமும் தெரிவிக்கமாட்டார்கள். ஆனால் தற்போது சிக் கிக்கொண்டேன். - இவ்வாறு அவர் கூறியதாக காவல் துறை யினர் தெரிவித்தனர்.

source: http://viduthalai.in/new/page1/2389.html