வெள்ளி

நேரமே சரி இல்லை என ஜோதிடம் கூறிய ஆசாமி நகையுடன் தப்பி ஓட்டம்


தாராபுரம் அருகே ஜோதிடர் வேடத்தில் வந்த ஆசாமி, வீட்டில் தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றி நகையுடன் தப்பினார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தங்கவேல் (68). கூலித் தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி. நேற்று காலை தங்கவேல் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனலட்சுமி தனியாக இருந்தார்.
அப்போது, ஜோதிடரைப் போல வந்த ஒரு ஆசாமி வீட்டு கதவை தட்டியுள்ளார். தனலட்சுமியும் ஜோதிடம் பார்க்கலாம் என்ற ஆசையில் அவரை வீட்டினுள் அழைத்து சென்றார். தனலட்சுமியின் கைரேகை, ஜாதகத்தை வாங்கிப் பார்த்த அந்த ஆசாமி, ‘இப்போது உங்களுக்கு நேரம் சரியில்லை; எந்த செயலை செய்தாலும் யோசித்து செய்யுங்கள்‘ என ஆலோசனை கூறியுள்ளார். பரிகாரமாகவும் சிலவற்றை கூறினார்.
இதனால், தனலட்சுமி குழப்பமடைந்தார். அப்போது அந்த ஆசாமி, ‘குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்’ என கேட்டதால், தனலட்சுமி தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தார். தண்ணீரை குடித்துவிட்டு, ‘அம்மா கவனமாக இருங்கள்’ என கூறிச்சென்றுள்ளார்.
ஜோதிடர் சென்ற சிறிதுநேரம் கழித்து பீரோவை பார்த்தபோது அதில் வைத்திருந்த 4 பவுன் நகை மாயமாகி இருந்தது. தண்ணீர் கொண்டுவர சென்றபோது ஜோதிடர், எடுத்து சென்றது தெரியவந்தது. இது குறித்து, தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
dinakaran.com

நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் படுக்கை அறையில் இருக்கும் வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ. 20 கோடி பணம் -லெனின்

தானும், ரஞ்சிதாவும் அந்தரங்கமாக, படுக்கை அறையில் இருக்கும் காட்சி அடங்கிய வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ. 20 கோடி பணம் தருவதாக பேரம்பேசினார் சாமியார் நித்தியானந்தா என்று கூறியுள்ளார் அந்த சிடியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய லெனின் கருப்பன்.

லெனின் கருப்பன், நித்தியானந்தாவிடம் சீடராகவும், டிரைவராகவும் இருந்தவர். இவர்தான் ரஞ்சிதாவுடன், நித்தியானந்தாவுக்கு உள்ள தொடர்புகளை அறிந்து அவர்களுக்குத் தெரியாமல் அவர்கள் படுக்கை அறையில் இருக்கும் நெருக்கமான காட்சிகளை வீடியோவில் படமாக்கி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.

நேற்று பெங்களூரில் செய்தியாளர்களைச்சந்தித்தார் லெனின் கருப்பன். அப்போது அவர் கூறுகையில்,

நித்யானந்தா தொடர்பான சி.டி.யை நான் வெளியிடும் முன்பும், அதற்கு பிறகும் ரூ.20 கோடி வரை என்னிடம் அவர் பேரம் பேசினார். சி.டி.யை வெளியிட வேண்டாம், எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம் என்றும் நித்யானந்தா கேட்டுக் கொண்டார்.

நித்யானந்தா இங்கு சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார். நான் கிறிஸ்தவர் என்று நித்யானந்தா கூறி உள்ளார். நான் இந்து மதத்தை சேர்ந்தவன். எனது தந்தை கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர் என்பதால் தான் எனக்கு லெனின் என்று பெயர் வைத்தார்.

என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி தனியார் நிறுவனம் மூலம் நித்யானந்தா ராமநகரில் 5 வழக்கு தொடுத்துள்ளார். தற்போது அவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், கோர்ட்டில் நான் ஆஜர் ஆகவிடாமல் தடுக்கவும், சாட்சிகளை அழிக்கவும் முயற்சி செய்கிறார். அது நடக்காது.

சமீபகாலமாக நித்யானந்தா எனக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். அவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது என்றார் லெனின்.

நாசப்படுத்திய நித்தியானந்தா-பெண் என்ஜீனியர் குமுறல்

இதற்கிடையே நித்தியானந்தா தன்னை கற்பழித்து நாசப்படுத்தியதாக கூறியுள்ளார் பெங்களூரைச் சேர்ந்த ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். இதுதொடர்பாக ராம் நகர் கோர்ட்டில் அவர் ரகசிய வாக்குமூலம் தரவுள்ளார்.

இதுதொடர்பாக கர்நாடக சிஐடி போலீஸாரிடம் புகார் மனு ஒன்றை அவர் அளித்துள்ளார்.

அதில் அப்பெண் கூறியிருப்பதாவது...

’நான் சாமியார் நித்யானந்தா ஆசிரமத்திற்கு கடந்த 2006-ம் ஆண்டு சென்றேன். அங்கு நடந்த பல்வேறு யாகங்களில் கலந்து கொண்டேன். நித்யானந்தாவின் சொற்பொழிவுகளை அடிக்கடி கேட்டேன். இது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. இதனால் அவரது அறைக்கு அடிக்கடி சென்று ஆசி பெறுவேன்.

ஒருநாள் நான் அவரிடம் ஆசி பெற சென்ற போது மதுபானம் வாங்கி வா என்று கூறினார். இதைக் கேட்டதும் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

இதுபற்றி நான் அங்கிருந்த சீடர்களிடம் போய் சொன்னேன். அதற்கு அவர்கள், சுவாமிஜி எது சொன்னாலும் அதை அப்படியே செய். அவரை ஒருபோதும் எதிர்த்து பேசி விடாதே. தெய்வ குற்றமாகி விடும் என்று பயம் காட்டினார்கள்.

கட்டாயப்படுத்தி மது அருந்தச் செய்தார்

உடனே நான் மைசூர் ரோட்டில் உள்ள மது கடைக்கு சென்று மதுபாட்டில் வாங்கி வந்து நித்யானந்தாவிடம் கொடுத்தேன்.

சிறிது நேரம் தியானம் செய்த அவர் அந்த மது பாட்டிலை என்னிடம் கொடுத்து குடிக்கச் சொன்னார். எனக்கு பயமாக இருந்தது. எனக்கு மது அருந்தி பழக்கம் இல்லை. என்னை விட்டு விடுங்கள் சாமி என்று கெஞ்சினேன்.

அதற்கு அவர், மனித குலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றால் தியாக குணம் அவசியம். அந்த குணத்தை நீ பெற வேண்டும் என்பதற்காகத்தான் குடிக்கச் சொன்னேன். இதில் தவறு எதுவும் இல்லை என்றார்.

கற்பழிப்பது மோட்ச மார்க்காமாம்!

இதனால் நான் மது குடித்தேன். சிறிது நேரத்தில் நான் போதையில் மயங்கியதும் என்னை நித்யானந்தா பலவந்தமாக கற்பழித்தார். இதனால் நான் கதறி அழுதேன். ஏன் என்னை நாசப்படுத்தினீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர், இதுதான் மோட்ச மார்க்கம். கவலைப்படாதே என்று கூறினார்.

சிலநாள் கழித்து அவர் என்னையும் மேலும் சில இளம்பெண்களையும் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகருக்கு அழைத்துச் சென்றார். அங்கு என்னை கவர்ச்சியாக உடை உடுத்தும் படி கூறினார். அவரும் காவி உடைக்கு விடை கொடுத்து விட்டு ஜீன்ஸ்-டி-சர்ட் அணிந்து கொண்டார்.

நிர்வாணமாக ஆட வைத்தார்:

என்னை அங்குள்ள “நிர்வாண கிளப்” ஒன்றுக்கு அழைத்து சென்றார். அங்கு ஆண்களும், பெண்களும் நிர்வாணமாக இருந்தனர். அவர்களைப் போல் எங்களையும் நிர்வாணமாக நின்று ஆட வைத்தார். இது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தாலும் அவர் வற்புறுத்தலால் எதுவும் செய்ய முடியவில்லை. லாஸ்வேகாசில் வைத்தும் அவர் என்னை கொடூரமான முறையில் கற்பழித்தார்.

இதுபற்றி போலீசில் புகார் செய்தால் என் மானம் போய் விடுமே என்று கருதி அவர் மீது புகார் எதுவும் செய்யவில்லை. 2006-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை அவரது பிடியில் சிக்கி தவித்தேன். அவரது சித்ரவதை தொடர்ந்ததால் ஆசிரமத்தை விட்டு வெளியேறினேன் ’என்று கூறியுள்ளார்.

விரைவில் அப்பெண் ராம்நகர் கோர்ட்டில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளிக்கவுள்ளார்.

ஞாயிறு

நித்யா தப்ப முடியாது!

எப்படியாவது கர்நாடக சி.ஐ.டி.யின் எஸ்.பி. யோகப்பாவையும் டி.ஐ.ஜி. சரண் ரெட்டியையும் மடக்கிவிடவேண்டும் என்று கடைசி வரை முயற்சித்துப் பார்த்து நித்யானந்தர் தரப்பு. வெயிட்டான சூட்கேஸ்களுடன் பிடதி ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் சுற்றிக் கொண்டிருந்தார்கள். நித்யானந்தர் மீதான வழக்கை குவாஷ் செய்துவிடவேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை முயற்சிகளும். ஆனால், அவர்களின் அத் தனை வலையிலும் சிக்காமல், ராம்நகர் நீதிமன் றத்தில் நித்யானந்தா உள்ளிட்ட 5 பேர் மீது சார்ஜ் ஷீட் செய்துவிட்டது கர்நாடக சி.ஐ.டி.

லெனின் கருப்பன் என்கிற லெனின் தர் மானந்தா ரகசியமாக எடுத்த நித்யானந்தர்- ரஞ்சிதா படுக்கையறை வீடியோ காட்சிகள் நமது நக்கீரனிலும் தொலைக்காட்சி சேனல்களிலும் வெளியான போது, சாமியார் போர்வையில் இருந்த நித்யானந்தாவின் உண்மை முகம் உலகத்திற்குத் தெரிய வந்தது. அவரது ஆசிரமத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் பற்றிய தகவல்களும் வெளியாக, தமிழக போலீஸ்தான் முதலில் எஃப்.ஐ.ஆர். போட்டது. பிறகு, பிடதி ஆசிரமம் மைசூர் அருகே அமைந்திருப்பதால் கர்நாடக போலீசுக்கு வழக்கு மாற்றமானது. கர்நாடக போலீசார் இதில் மெத்தனம் காட்டிவந்த நிலையில் தான், கர்நாடக சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது.

தலைமறைவாக இருந்த நித்யானந்தாவின் செல்போன் பேச்சுகள் ட்ரேஸ் செய்யப்பட்டதில் அவர், இமாச்சலப் பிரதேசத் தில் இருப்பது தெரியவர, அங்கே சென்று கைது செய்தது சி.ஐ.டி. 53 நாள் சிறையிலிருந்த நித்யானந்தா, விசாரணை நேரத்தில் டிரா மா போட முயன்றபோது, போலீசார் தங்கள் பாணியில் சில போடு களைப் போட்டு உண்மைகளை வெளியே கொண்டுவந்தனர்.

தன் மீது சார்ஜ் ஷீட் போடுவதற்குள் வழக்கை குவாஷ் செய்துவிடவேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா வழக்குப் போட்டார். இந்த வழக்கை முதலில் ஒரு நீதிபதி மற்றொரு நீதிபதிக்குப் பரிந்துரைக்க, அவரும் விசாரிக்க மறுத்து, வேறொருவருக்கு அனுப்ப, இப்படி 3 நீதிபதிகளிடம் மாறியது இந்த வழக்கு. கடந்த 29-ந் தேதியன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சி.ஐ.டி. தரப்பில் ஆஜரான அரசு வக்கீல், 27-ந் தேதியே சார்ஜ்ஷீட் போடப்பட்டுவிட்டது என்று பதிலளிக்க அத்தனை பேருக்கும் ஷாக். வழக்கை குவாஷ் செய்வது தொடர்பான பெட்டிஷன் விசாரணையில் உள்ள நிலையில் எப்படி சார்ஜ் ஷீட் போடப்பட்டது என்ற கேள்வி முன்வைக்கப்பட, நித்தியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் வாக்குமூலம் கொடுத்திருப்பதையும் தெரிவித்தது சி.ஐ.டி தரப்பு. எந்தப் பெண்ணுமே புகார் கொடுக்கவில்லை என நித்யானந்தா தரப்பு தங்களுக்கு ஆதரவான ஊடகங்கள் வாயிலாகப் பிரச்சாரத்தை வேகப்படுத்திப் பார்க்கிறது.

நித்யானந்தாவால் பாதிக்கப்பட்ட ஒரு வெளி நாடு வாழ் பெண்மணி, கர்நாடகாவுக்கே நேரில் வந்து, தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். மெடிக்கல் டெஸ்ட்டிலும் அவர் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப் பட்டிருக்கிறது.

அந்தப் பெண் அளித்துள்ள புகாரில், ""நானும் என் கணவரும் நித்யானந்தரின் ஆசி ரமத்திற்கு வந்தோம். என் கணவர் வெளிநாட் டுக்குத் திரும்பிவிட்டார். நான் நித்யானந்தரின் போதனைகளால் ஆசிரமத்தில் இருந்தேன். "தான்தான் சிவன், கிருஷ்ணன் என்றும் நான்தான் பார்வதி' என்றும் அவர் வர்ணிப்பார். தான் சொல்கிறபடி நடந்துகொண்டால் ஆன்மீக உலகத்தில் உயர்ந்த இடம் கிடைக் கும் என்று சொல்வார். அவரது போதனை களில் மயங்கிய என்னை அவர் பயன்படுத்திக் கொண்டார். அவரோட 4 பேரும் அந்த ஆசி ரமத்தில் துணையிருந்தார்கள்'' என்று அந்த வாக்குமூலத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில்தான், நித்யானந்தாவுடன் பக்தா னந்தா, சச்சிதானந்தா, சதா னந்தா, ராகினி ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்தப்பெண் தனது வாக்குமூலத்தில், ""கும்பமேளா வுக்கு புனித நீராடப் போன போதுகூட அவர் விடவில்லை. இதுதான் கடவுளை அடையும் வழி என்றும், இதுதான் பக்தி மார்க்கம், இந்த உறவு ரொம்பவும் புனிதம் என்றபடி யும் கட்டிப் பிடித் தார். உடம்பெல் லாம் சேறும் சகதி யுமாக இருந்த நிலையில் இப் படி செய்கிறாரே என்று தடுத்துப் பார்த்தேன். இது வும் சுகம்தான் என்று சொல்லி என்னை படாத பாடு படுத்தினார்'' என்று சொல்லியிருக்கிறார். ஆசிரமத்தில் இருந்த ஒரு பையனும் தன்னை நித்யானந்தா ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தியது பற்றி சொல்லி யிருக்கிறார்.

வலுவான வாக்குமூலங்கள் கிடைத்திருக்கும் நிலையில், நித்யானந்தா மீது என்ன ஆக்ஷன் எடுக்கப்படும் என்று சி.ஐ.டி. வட்டாரத்தில் நாம் கேட்டபோது, ""இது கல்ட் ஆக்ஷன் என்ற வகையில் சேர்கிறது. அதாவது, திட்டமிட்டே ஒரு கும்பலாக இப்படி செயல்பட்டிருக்கிறார்கள் என்பது தண்டனைக்குரிய குற்றமாகும்'' என் கின்றனர்.

நித்யானந்தா மீது முதலில் புகார் கொடுத்த லெனின் தர்மானந்தா நம்மிடம், ""நான் நக்கீரனில் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நித்யானந்தா மோசமான ஆள் என்று எனக்கு முதலில் தெரிந்தது 2007ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாள். இந்த 2010-ல் அதே நவம்பர் 27-ந் தேதிதான் அவர் மீது சார்ஜ் ஷீட் போடப்பட்டிருக்கிறது. பலபேர் வாழ்க்கையில் விளையாடிய அவர் தப்பிக்கவே முடியாது'' என்கிறார் உறுதியான குரலில்.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை எதிர்த்து நித்யானந்தா தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட, குவாஷ் பெட்டிஷன் மீதான விசாரணை வரும் 7-ந் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் இறுக்கமான பிடிக்குள் நித்யானந்தாவும் அவரது ஆட்களும் சிக்கியுள்ள நிலையில், நித்திக்கு ஆதரவாக ரத்தக் கையெழுத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் வேலையில் ஆசிரமத் தரப்புத் தீவிரமாகியுள்ளது.

-நமது நிருபர்

நக்கீரன் 04-12-2010

காதலனின் வக்கிர கேமரா! சீரழிந்த இளம்பெண்கள்!

இளம்பெண் உமாராணிக்கு நாளை திருமணம். ஆனால் இன்று ஆற்றுக்குக் குளிக்கப் போனவள் வீடு திரும்பவில்லை. ஊர் முழுக்க தேடியலைந்த உமாராணியின் அம்மா தேவிகா... பதறியடித்தபடி அறந்தாங்கி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்... 21-ந் தேதி ஞாயிறு இரவு ஒன்பது மணிக்கு.

""ம்... விடிஞ்சா கல்யாணம்... பொண் ணை காணலை. வேறென்ன... விருப்பமில் லாத ஒருத்தனுக்கு கட்டிக்கொடுக்க ஏற்பாடு செஞ்சிருப்பீங்க... அவ விருப்பப்பட்டவ னோட ஓடிப்போயிருப்பா. சரி... சரி... எப்படியா இருந்தாலும் மாலையும் கழுத் துமா ஸ்டேஷன்லதான் வந்து நிப்பா... சொல்லி அனுப்புறோம் வாங்க'' என்று காக்கிகள் ஆறுதல்படுத்த... ""அய்யோ அவ ஆசைப்பட்டவனுக்குத்தானே கல்யாணம் பண்ணிவைக்க ஏற்பாடு பண்ணினேன். எங்கபோயி தொலைஞ்சாளோ?'' என்று தாய் தேவிகா கதற... புகாரை வாங்கிக்கொண்டு சீரியஸாக தேட ஆரம்பித்தனர் காக்கிகளும்.

இந்த நிலையில்தான்... இரண்டு நாட்களுக்குப் பிறகு புதன்கிழமை மதியம் நாகுடி மூடுபாலம் அருகே ஒரு சாக்குமூட்டை கிடக்க... மக்கள் கூட்டம் குவிந்திருக்கிறது.

தேவிகாவையும் கூட்டிக் கொண்டு போனது போலீஸ். சாக்குமூட்டைக்குள் சடலமாகக் கிடந்தாள் இளம்பெண் உமாராணி.

உமா கொலை செய்யப்பட்ட தன் பின்னணி தகவல்களை விசாரித்தபோது... ""மூர்த்திங்கிற பையனை லவ் பண்ணியிருக்குங்க இந்த உமா. இந்த மூர்த்தி இருக்கானே இவன் கிராமத்துல பொறந்தாலும் கில்லாடிப் பயலா பொறுக்கித்தனமா சுத்திக்கிட்டி ருப்பான். இவன் அண்ணன் வெளி நாட்டுக்குப் போயிட்டு வந்ததால ஓரளவுக்கு வசதி. உமாராணியோ ஒன்பதாவது வரை படிச்சுட்டு டவுன்ல ஒரு ஃபோட் டோ ஸ்டுடி யோவுல வேலை பார்த்தது. அப்புறம் மூர்த்தியின் ஊரிலுள்ள கயிறு திரிக்கிற கம்பெனியில வேலை பார்த்துக் கிட்டிருந்தது. இந்த மூர்த்தி பய வீட்டு தோப்பு வழியாத்தான் கம்பெனிக்குப் போகவேண்டியிருக்கும். அப்படிப் போகும்போது... லவ்வுங்கிற பேர்ல தன்னோட மோட்டார் ரூம், தோப்புன்னு கூட்டிட்டுப் போய் அனுபவிச்சவன்... அதோட விட்டிருந்தா பரவாயில்ல. அவகூட உல்லாசமா இருக்கிற மாதிரி விதவிதமா கேமராவால படம் பிடிச்சிருக்கான்.

அந்தப் பொண்ணுக்கு பீர் வாங்கிக் கொடுத்து குடிக்கவெச்சு... எப்படி எப்படியெல்லாம் கேவலமா படம் பிடிக்கணுமோ அப்படியெல்லாம் எடுத்திருக்கான். ப்ச்... பாவம்ங்க ஒரு தடவை "ஏன் மாமா என்னை இப்படில்லாம் படம் எடுக்குறே'ன்னு கேக்குது உமா. அதுக்கு இந்த ராஸ்கல், "சம்பாதிக்கத்தான்'னு அசால்ட் டா சொல்வதும், அந்த வீடியோவில் பதிவாகி யிருக்கு. எனக்கென்னவோ இதையெல்லாம் இண்டர்நெட்டுக்கு வித்துருப்பானுங்களோன்னு தோணுது. இவனோட நண்பர்களான குமார், கோபியும் சேர்ந்துதான் இப்படிக் கேவலமான வேலையில ஈடுபட்டிருக்கானுங்க. இப்படி வக்கிர வேலையில் ஈடுபடுத்தின மூர்த்தி இந்த பொண்ணையா கல்யா ணம் பண்ணிப்பான்?

அதான் நாளைக்கு கல்யாணம்னா... இன்னைக்கு ஆத்துக்குக் குளிக்கப்போன புள்ளைய மோட்டார் ரூமுக்கு கூட்டிட்டுப் போய் கரண்ட் ஷாக் வெச்சு கொன்னுட்டு... சாக்குமூட்டையில கட்டி ஆத்துல விட்டுட்டு ஊரைவிட்டே ஓடிட்டானுங்க'' என்ற பகீர் பின்னணி சொன்னவர் அந்த சி.டி.யையும் நம்மிடம் கொடுத்தார்.



அடப்பாவமே... அவர் சொன் னது போலவேதான் அந்த வீடியோ காட்சிகள் நம்மை வேதனைப்பட வைத்தன. மூர்த்தியின் வாழைத்தோப் பில் சேலை, தாவணியுடன் குடும்பப் பெண்ணாக தோன்றுகிறாள் உமா ராணி. பிறகு படிப்படியாக மூர்த்தி சொல்வதற்கிணங்க ஆடைகளை அவிழ்க்கிறாள். இப்படி பலவிதமான இடங்களில் விதவிதமாக தோன்றி ஆபாசமாக நிற்கிறார். அதோடு மூர்த்தியுடன் உல்லாசமாக இருக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. வேளாங்கண்ணி லாட்ஜில் மட்டுமே பல வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கு மேல் ஓடக்கூடியதாக இருக்கிறது இந்த அந்தரங்க காட்சிகள். மேலும் செல்ஃபோனில் எடுக்கப்பட்டது மட்டுமல்ல... தெளிவாகத் தெரியும் அளவுக்கு வீடியோ கேமராவால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதை வக்கிரப்புத்தியோடு மட்டும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஏனென்றால்... பல வீடியோ காட்சிகளில் மியூசிக் அண்ட் மிக்ஸிங் வேலையெல்லாம் செய்திருக்கிறான். அது மட்டுமல்ல... ஒரு மெடிக்கல் ஷாப்பில் அமர்ந்திருக்கும் இன்னொரு இளம்பெண்ணையும் விரட்டி விரட்டி கேமராவில் பதிவு செய்திருக்கிறான். ஆக... மூர்த்தியும் அவனது நண்பர்களும் இதை ஒரு பிசினஸாகவே செய்திருப் பார்கள் என்றுதான் தோன்றுகிறது.

உமா கொலை சம்பந்தமாக வக்கிர காதலன் மூர்த்தி பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளான்.

கதறியபடி தாய் தேவிகாவோ... ""என் கணவர் இறந்த பிறகு ரொம்ப கஷ்டப்பட்டு ரெண்டு பிள்ளைகளையும் வளர்த்தேங்க. மூணு மாசத்துக்கு முன்னால பக்கத்து ஊரான மேற்பனைக் காடுவைச் சேர்ந்த சன்னாசி மகன் மூர்த்திங்கிற பையனுக்கு வேறு பெண்ணோடு கல்யாண ஏற்பாடு பண்ணினாங்க. அப்பதான் இவ மருந்து குடிச்சு தற்கொலை பண்ணிக்கப் போனா. காப்பாத்தி கேட்டப்போதான், அவன்கூட பழகி சுத்தினது... அதனால கர்ப்பமான விஷயத்தை எல்லாம் சொல்லி அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னா. கல்யாண மாலை போட வேண்டிய சண்டாளப்பாவி... சாவு மாலைபோட வெச்சுட்டானே. என்புள்ளை சாவுக்குக் காரண மான அந்த மூர்த்தியையும் அவனது நண்பர்களையும் கடவுள் சும்மா விடாது'' என்று சாபம் விட்டபடி கதறுகிறார்.

காவல்துறை மூர்த்தியை கஸ்டடியில் எடுத்து உண்மை யாக விசாரித்தால்... காதலியின் அந்தரங்கத்தை வியாபாரமாக்கிய மூர்த்தியின் நெட்வொர்க்கையும் இவர்களின் வக்கிர கேமராவில் எத்தனை எத்தனை இளம்பெண்கள் சிக்கியிருக்கிறார்கள் என்பதையும் கண்டுபிடிக்கலாம்.

-பகத்சிங்
நக்கீரன் 04-12-2010