சனி

கேமராவில் இளம்பெண்களுடன் திவாரி சிக்கியது எப்படி?



"எரியும் ஆந்திரா! இளம்பெண்ணுடன் கவர்னர் உல்லாசம்! -லைவ் ரிலே' என்ற தலைப்பில் 85 வயதான ஆந்திர கவர்னர் என்.டி.திவாரி அடித்த மன்மதக் கூத்துக்களையும்... அது அவரால் பாதிக்கப்பட்ட ராதிகா என்ற பெண்ணாலேயே படம்பிடிக்கப்பட்டு... அது ஏ.பி.என். தொலைக்காட்சியில் ரிலே ஆகி ஆந்திராவை பரபரப் பாகியதையும் நக்கீரன் இதழில் அட்டைப்படக் கட்டுரையாகக் கொடுத்திருந்தோம். அதிலேயே திவாரியை கவர்னர் பதவியில் இருந்து தூக்க காங்கிரஸ் மேலிடம் முடிவெடுத்த தகவலையும் வெளியிட்டிருந்தோம்.

நமது இதழ் கடைக்கு வந்த அன்றே டெல்லி மேலிடம் நாம் சொன்னவாறு திவாரியை கவர்னர் பதவியில் இருந்து விடுவித்து வீட்டுக்கு அனுப்பிவிட்டது. அவருக்கு பதில் ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி நரசிம்மன் கவர்னர் நாற்காலியில் உட்காரவைக்கப்பட்டிருக்கிறார். அந்த ஆபாச சி.டி.யில் ராதிகாவோடு மேலும் மேலும் மூன்று பெண்களிடம் கவர்னர் திவாரி கிளுகிளு லீலைகளில் ஈடுபட்டதும் தற்போது பகிரங்கமாகியிருக்கிறது. நாம் அந்த பலான சி.டி.யில் கவர்னரோடு இருந்த ராதிகா உள்ளிட்ட நான்கு பெண்களையும் தீவிர தேடலுக்குப்பிறகு கண்டுபிடித்தோம்.

கவர்னர் பதவியைப் பறிகொடுத்திருக்கும் திவாரியின் ஆட்களால்... தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற மிரட்சியில் இருந்த அந்தப் பெண் கள் நம்மிடம் முழுதாக மனம் திறந் தார்கள்.

முதலில் கவர்னருடன் புரிந்த லீலைகளை தைரியமாகப் படம்பிடித்த ராதிகா நம்மிடம் “""எனக்கு சொந்த ஊர் உத்திராஞ்சல் மாநிலத்தில் இருக்கும் டேராடூன். என்னை ராதிகா என்றும் துர்க்கா அரோரா என்றும் அழைப்பார்கள். ஆனால் என் உண்மையான இயற்பெயர் உஜ்ஜால சர்மா. என்.டி.திவாரி என் சமூ கத்தை சேர்ந்தவர். அவரிடம் உதவியாள ராக இருந்த ஆரியேந்திர சர்மா மூலம் தான் திவாரி எனக்கு அறிமுகமானார். திவாரி பெண் விஷயத்தில் மோசமானவர். விதவிதமாகப் பெண்களை அனுபவிக்கும் ஆசையும் சபலமும் கொண்டவர். அவர் முதல்முறை உத்திரப்பிரதேச முதல்வராக இருந்த போது அவரது மந்திரிசபையில் இருந்த மதுமிதா என்ற பெண்ணிடம் சபலப் பட்டார். ஒரு தடவை முதல்வரான அவர் அமைச்சராக இருந்த மதுமிதா சரிகாவுடன் யாருக்கும் சொல்லாமல் எஸ்கேப் ஆக... உ.பி.மாநிலமே பதட்டமானது. காவல்துறை பலமாகத் தேடியபோதும் யார் கண்ணிலும் சிக்காமல் 10 நாட்களுக்கும் மேலாய் உதவியாளர் ஆரியேந்திர சர்மாவின் ஏற்பாட்டில் எங்கள் டேராடூன் வீட்டில்தான் தங்கியிருந்தார்.

அந்த 10 நாளில் இன்னும் பெண்களை ஏற்பாடு பண்ணித்தருமாறு அவர் கேட்க... நானும் பலரை ஏற்பாடு செய்தேன். திவாரிக்கு குரூப் செக்ஸில் அதீத ஆர்வம். ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் கும்மாளம் போடுவார். மதுமிதாவோடு நான் ஏற்பாடு செய்த பெண்களோடும் ஒன்றாய்க் கும்மாளம் அடித்தவர்... இரண்டு மூன்று நாட்களிலேயே... நீயும் எங்களோடு கலந்துகொள் என்று வற்புறுத்தி என்னையும் சம்மதிக்க வைத்தார். இந்த டேராடூன் விசிட்டுக்குப் பின் நான் அவரின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருத்தியாக ஆகிவிட்டேன்.

வயது ஆக ஆக... அவர் உடல் அதற்கெல்லாம் ஒத்துழைக்க மறுத்தது. இருந்தாலும் ஆசையை அடக்க முடியாத திவாரி தினமும் என்னையும் நான் ஏற்பாடு செய்யும் பெண்களையும் பிறந்தகோலமாக்கி மசாஜ் செய்யச் சொல்வார். ஆந்திர கவர்னரானபோதும் என்னை அங்கே கொண்டுவந்துவிட்டார். அங்கும் அவரின் லீலைகள் தொடர்ந்தது. இந்த நீண்டகால பழக்கத்தில் என்னையும் எனது தோழிகளையும் ஆரியேந்திர சர்மாவும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார். அதோடு தனக்கு நெருக்கமான சில எம்.பி.க்களுக்கும் எங்களை ஆரியேந்திர சர்மா விருந்து வைத்தார். இத்தனை அர்ப்பணம் செய்தும் திவாரி பணம் எதுவும் தரமாட்டார். அதனால் அரசாங்கக் காரியங்களை பலருக்கும் செய்துகொடுத்து சம்பாதிக்க ஆரம்பித்தேன்.

இந்தநிலையில் ராயலசீமா பகுதியில் ஒப்பிலாபுரத்தில் ரெட்டி பிரதர்ஸ் நடத்திவந்த இரும்புச்சுரங்கத்தை டெண்டர் எடுக்க ஒரு தரப்பு என்னை அணுக... அவர்களிடம் ஒரு பெரிய அட்வான்ஸை வாங்கி ஆரியேந்திர சர்மாவிடம் கொடுத்தேன். ஆனால் டெண்டர் கிடைக்கவில்லை. சுப்ரீம்கோர்ட் தடை அது, இது என காரணம் சொன்னார்கள். பணம் கொடுத்த தரப்பு பணத்தைக் கேட்டு நச்சரித்தது. திவாரியோ அலட்டிக்கொள்ளவில்லை. உடனே ஆந்திர காங்கிரஸ் பெண்பிரமுகருக்கும் செக்ஸ் தொடர்பு இருப்பதை மீடியாக்களில் பரப்பி விட்டேன். இதற்கும் திவாரி அசரவில்லை. அவர் எப்போது போனாலும் என் உடம்பிலேயே கவனமாக இருந்தார். வேறுவழியில்லாமல் பிளாக்மெயில் பண்ணி கொடுத்த பணத்தை வாங்கும் முடிவுக்கு வந்த நான்... வழக்கமாக நான் அழைத்துப்போகும் சில பெண்களிடம் விஷயத்தைச் சொல்லி உதவி கேட்டேன். அவர்களும் ஒத்துக்கொள்ள... ஒரு சல்லாபப் பொழுதில் திவாரி அதிலேயே மூழ்கியிருந்தபோது அத்தனையையும் அப்பட்டமாகப் படம்பிடித்தேன்.

அவர் வெட்கமில்லாமல் செய்த விஷயங்களையும் அவர் எங்க ளைக் கண்ட இடங்களில் முத்தமிட்டதையும்கூட படம் பிடித்தேன். பிறகு இந்த விஷயத்தை அவரிடம் நான் தெரிவித்து பணம் கேட்டபோது.. கோபமான அவர் என்னைத் தீர்த்துக்கட்ட ஆட்களை அனுப்ப ஆரம்பித்தார். இதனால்தான் ஆந்திரஜோதி பத்திரிகையை நாடினேன். அவர்கள் தங்கள் டி.வி.யில் ஓரளவு வெளிப்படுத்த முடிந்த காட்சி களை மட்டும் ஒளிபரப்பினார்கள். பணத்தை ஏமாற் றியதால்தான் அவருக்கு இப்படி ஒரு தண்டனை யைக் கொடுத்தேன்''’என்றார் விரிவாகவே.

இவரோடு சி.டி.யில் இருந்த மற்ற பெண்களான லஷ்மி, ரேணு, துர்க்கா ஆகியோர் ""திவாரி வெளி உலகத்துக்குதான் பெரிய மனுசன். கதவைச் சாத்திவிட்டால் அவரைவிட சின்னமனுசன் இல்லை. நாங்கள் எங்கள் தோழிக்காகத்தான் படம் எடுக்க ஒத்துழைச்சோம். ஆனா இப்படி கொலைகாரப் படைகளை எல்லாம் அவர் ஏவுவார்ங்கிறதை நாங்க எதிர்பார்க் கலை''’என்கிறார்கள் கவலையாய்.

ராதிகா மூலம் காண்ட்ராக்டுக்கு முயன்ற ஒரு காங்கிரஸ் எம்.பி.தான் திவாரிக்கு எதிராக இப்படி ராதிகாவை ஏவியிருக்கிறார் என்கிற டாக் ஒரு பக்கம் அடிபட்டாலும்.... சூறாவளியாய்க் கிளம்பிய தெலுங்கானா விவகாரத்தை இரண்டாம் பக்கச் செய்தியாக்கிவிட்டு... ஆந்திரப் பத்திரிகைகளில் முதல்பக்கத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டது இந்த கிளுகிளு விவகாரம்.

-பிரகாஷ்
நக்கீரன் 03-01-2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக