எப்படியாவது கர்நாடக சி.ஐ.டி.யின் எஸ்.பி. யோகப்பாவையும் டி.ஐ.ஜி. சரண் ரெட்டியையும் மடக்கிவிடவேண்டும் என்று கடைசி வரை முயற்சித்துப் பார்த்து நித்யானந்தர் தரப்பு. வெயிட்டான சூட்கேஸ்களுடன் பிடதி ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் சுற்றிக் கொண்டிருந்தார்கள். நித்யானந்தர் மீதான வழக்கை குவாஷ் செய்துவிடவேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை முயற்சிகளும். ஆனால், அவர்களின் அத் தனை வலையிலும் சிக்காமல், ராம்நகர் நீதிமன் றத்தில் நித்யானந்தா உள்ளிட்ட 5 பேர் மீது சார்ஜ் ஷீட் செய்துவிட்டது கர்நாடக சி.ஐ.டி.
லெனின் கருப்பன் என்கிற லெனின் தர் மானந்தா ரகசியமாக எடுத்த நித்யானந்தர்- ரஞ்சிதா படுக்கையறை வீடியோ காட்சிகள் நமது நக்கீரனிலும் தொலைக்காட்சி சேனல்களிலும் வெளியான போது, சாமியார் போர்வையில் இருந்த நித்யானந்தாவின் உண்மை முகம் உலகத்திற்குத் தெரிய வந்தது. அவரது ஆசிரமத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் பற்றிய தகவல்களும் வெளியாக, தமிழக போலீஸ்தான் முதலில் எஃப்.ஐ.ஆர். போட்டது. பிறகு, பிடதி ஆசிரமம் மைசூர் அருகே அமைந்திருப்பதால் கர்நாடக போலீசுக்கு வழக்கு மாற்றமானது. கர்நாடக போலீசார் இதில் மெத்தனம் காட்டிவந்த நிலையில் தான், கர்நாடக சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது.
தலைமறைவாக இருந்த நித்யானந்தாவின் செல்போன் பேச்சுகள் ட்ரேஸ் செய்யப்பட்டதில் அவர், இமாச்சலப் பிரதேசத் தில் இருப்பது தெரியவர, அங்கே சென்று கைது செய்தது சி.ஐ.டி. 53 நாள் சிறையிலிருந்த நித்யானந்தா, விசாரணை நேரத்தில் டிரா மா போட முயன்றபோது, போலீசார் தங்கள் பாணியில் சில போடு களைப் போட்டு உண்மைகளை வெளியே கொண்டுவந்தனர்.
தன் மீது சார்ஜ் ஷீட் போடுவதற்குள் வழக்கை குவாஷ் செய்துவிடவேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா வழக்குப் போட்டார். இந்த வழக்கை முதலில் ஒரு நீதிபதி மற்றொரு நீதிபதிக்குப் பரிந்துரைக்க, அவரும் விசாரிக்க மறுத்து, வேறொருவருக்கு அனுப்ப, இப்படி 3 நீதிபதிகளிடம் மாறியது இந்த வழக்கு. கடந்த 29-ந் தேதியன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சி.ஐ.டி. தரப்பில் ஆஜரான அரசு வக்கீல், 27-ந் தேதியே சார்ஜ்ஷீட் போடப்பட்டுவிட்டது என்று பதிலளிக்க அத்தனை பேருக்கும் ஷாக். வழக்கை குவாஷ் செய்வது தொடர்பான பெட்டிஷன் விசாரணையில் உள்ள நிலையில் எப்படி சார்ஜ் ஷீட் போடப்பட்டது என்ற கேள்வி முன்வைக்கப்பட, நித்தியால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் வாக்குமூலம் கொடுத்திருப்பதையும் தெரிவித்தது சி.ஐ.டி தரப்பு. எந்தப் பெண்ணுமே புகார் கொடுக்கவில்லை என நித்யானந்தா தரப்பு தங்களுக்கு ஆதரவான ஊடகங்கள் வாயிலாகப் பிரச்சாரத்தை வேகப்படுத்திப் பார்க்கிறது.
நித்யானந்தாவால் பாதிக்கப்பட்ட ஒரு வெளி நாடு வாழ் பெண்மணி, கர்நாடகாவுக்கே நேரில் வந்து, தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி சி.ஐ.டி. போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். மெடிக்கல் டெஸ்ட்டிலும் அவர் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப் பட்டிருக்கிறது.
அந்தப் பெண் அளித்துள்ள புகாரில், ""நானும் என் கணவரும் நித்யானந்தரின் ஆசி ரமத்திற்கு வந்தோம். என் கணவர் வெளிநாட் டுக்குத் திரும்பிவிட்டார். நான் நித்யானந்தரின் போதனைகளால் ஆசிரமத்தில் இருந்தேன். "தான்தான் சிவன், கிருஷ்ணன் என்றும் நான்தான் பார்வதி' என்றும் அவர் வர்ணிப்பார். தான் சொல்கிறபடி நடந்துகொண்டால் ஆன்மீக உலகத்தில் உயர்ந்த இடம் கிடைக் கும் என்று சொல்வார். அவரது போதனை களில் மயங்கிய என்னை அவர் பயன்படுத்திக் கொண்டார். அவரோட 4 பேரும் அந்த ஆசி ரமத்தில் துணையிருந்தார்கள்'' என்று அந்த வாக்குமூலத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில்தான், நித்யானந்தாவுடன் பக்தா னந்தா, சச்சிதானந்தா, சதா னந்தா, ராகினி ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்தப்பெண் தனது வாக்குமூலத்தில், ""கும்பமேளா வுக்கு புனித நீராடப் போன போதுகூட அவர் விடவில்லை. இதுதான் கடவுளை அடையும் வழி என்றும், இதுதான் பக்தி மார்க்கம், இந்த உறவு ரொம்பவும் புனிதம் என்றபடி யும் கட்டிப் பிடித் தார். உடம்பெல் லாம் சேறும் சகதி யுமாக இருந்த நிலையில் இப் படி செய்கிறாரே என்று தடுத்துப் பார்த்தேன். இது வும் சுகம்தான் என்று சொல்லி என்னை படாத பாடு படுத்தினார்'' என்று சொல்லியிருக்கிறார். ஆசிரமத்தில் இருந்த ஒரு பையனும் தன்னை நித்யானந்தா ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தியது பற்றி சொல்லி யிருக்கிறார்.
வலுவான வாக்குமூலங்கள் கிடைத்திருக்கும் நிலையில், நித்யானந்தா மீது என்ன ஆக்ஷன் எடுக்கப்படும் என்று சி.ஐ.டி. வட்டாரத்தில் நாம் கேட்டபோது, ""இது கல்ட் ஆக்ஷன் என்ற வகையில் சேர்கிறது. அதாவது, திட்டமிட்டே ஒரு கும்பலாக இப்படி செயல்பட்டிருக்கிறார்கள் என்பது தண்டனைக்குரிய குற்றமாகும்'' என் கின்றனர்.
நித்யானந்தா மீது முதலில் புகார் கொடுத்த லெனின் தர்மானந்தா நம்மிடம், ""நான் நக்கீரனில் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நித்யானந்தா மோசமான ஆள் என்று எனக்கு முதலில் தெரிந்தது 2007ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாள். இந்த 2010-ல் அதே நவம்பர் 27-ந் தேதிதான் அவர் மீது சார்ஜ் ஷீட் போடப்பட்டிருக்கிறது. பலபேர் வாழ்க்கையில் விளையாடிய அவர் தப்பிக்கவே முடியாது'' என்கிறார் உறுதியான குரலில்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை எதிர்த்து நித்யானந்தா தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட, குவாஷ் பெட்டிஷன் மீதான விசாரணை வரும் 7-ந் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் இறுக்கமான பிடிக்குள் நித்யானந்தாவும் அவரது ஆட்களும் சிக்கியுள்ள நிலையில், நித்திக்கு ஆதரவாக ரத்தக் கையெழுத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பும் வேலையில் ஆசிரமத் தரப்புத் தீவிரமாகியுள்ளது.
-நமது நிருபர்
நக்கீரன் 04-12-2010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக